PUBLISHED ON : ஏப் 12, 2026

கோடையில் குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு எளிதாக கோடைகால நோய்கள் தொற்றிக் கொள்ளும். எனவே, செயற்கை இழை ஆடைகளைத் தவிர்த்து, காட்டன் மற்றும் மெல்லிய உடைகளை அணிவித்தல் நல்லது
* தண்ணீரில் வசம்புத்துாள் போட்டு சுட வைத்து, ஆறியபின் இந்நீரால் குழந்தைகளைக் குளிக்க வைக்க, கோடை காலத்தில் ஏற்படும் சருமத் தொல்லைகள் தீரும்
* நெல்லிக்காயை தண்ணீரில் சேர்த்து அரைத்து, உடலில் பூசி, சிறிது நேரம் கழித்துக் கழுவி வர வியர்க்குரு வராது.
* கோடை காலத்தில் அதிகமாக, 'மேக்-அப்' போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிக, 'மேக்-அப்' வியர்வையை அதிகபடுத்தும்
* அக்குள் பகுதியில், முடி இல்லாமல் பார்த்து கொண்டாலே வியர்வை நாற்றம் ஏற்படாது
* கோடை காலத்தில் இருமுறை குளிப்பது புத்துணர்ச்சியைத் தரும். குளித்து முடித்ததும் தரமானப் பவுடர் அல்லது சிறிதளவில் சென்ட் பூசுங்கள்
* குளிக்கும் நீரில் ஓரிரு துளிகள் சென்ட், டியோடரண்ட் அல்லது சந்தனம் சேர்த்துக் கொண்டால் உடல் கமகமக்கும்.

