/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அழகு குறிப்பு: முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க...
/
அழகு குறிப்பு: முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க...
PUBLISHED ON : மார் 01, 2026

பப்பாளிப்பழத்தை மிக்சியில் அரைத்து, அத்துடன் முல்தானி மட்டி மற்றும் வேப்பிலைப் பொடி சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறைந்து, முகம் பளபளப்பாகும்
* சோள மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவலாம்
* முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்னை உள்ளவர்கள், வெயிலில் சென்று, வீட்டிற்கு திரும்பியதும், சிறிது தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், அதிகப்படியான எண்ணெய் வழிவது குறைந்து, முகம் பளபளப்பாகும்.

