PUBLISHED ON : மே 17, 2026

அ நிறம் | அளவு
வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகாக இருக்கும். அலங்காரப் பொருட்களை கண்ணாடி போட்ட அலமாரியில் வைத்தால் துாசி படியாமல் இருக்கும். அளவுக்கு அதிகமான பொருட்கள் வீட்டின் அழகைக் கெடுக்கும். நுழைவாயில் தோரணம், உல்லன், எம்ப்ராய்டரி டேபிள் கிளாத், கர்ட்டன் இவை எல்லாமே வீட்டின் அழகை கூட்டும். கைவினைப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை ஆங்காங்கு ஒன்றிரண்டு வைத்தால் மனதிற்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கும்
நம் வீட்டில் உள்ள பெரிய பித்தளைப் பாத்திரங்களை நன்கு புளி போட்டு தேய்த்து வெயிலில் காய வைத்தால், புள்ளிகள் ஏதுமின்றி மஞ்சள் நிறத்தில் மின்னும். அவற்றை வரவேற்பறையின் ஒரு மூலையில் வைத்து, அதற்குள் ஒரு பிளாஸ்டிக் தட்டை வைத்து பின் அழகிய இன்டோர் செடி அல்லது மணி பிளாண்ட் தொட்டியை வைத்தால் வீட்டிற்கு அழகு கூடும்.
