PUBLISHED ON : மே 31, 2026

அ நிறம் | அளவு
* எந்த வகைப் புளிக்குழம்பு தயாரிக்கும் போதும், கடுகுடன் சிறிது சோம்பையும் சேர்த்துத் தாளித்தால் வாசனையுடன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்
* வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் 'வெஜிடேபிள் சாலட்' செய்யும்போது சில நேரம் அதிகமாக நீர் விடும். அந்த சமயத்தில் சில, 'பிரெட்' துண்டுகளை அதில் சேர்த்தா 'சாலட்'டின் சுவையும் கூடும்
* சூடாக வடித்த அரிசி கஞ்சியில் பனங்கற்கண்டு போட்டு குடித்து வர, வறட்டு இருமல் நீங்கும்
* சமையல் அறையில் வைக்கும் குப்பைக்கூடைகளை எத்தனை முறை கழுவினாலும் ஒருவித வாடை இருந்து கொண்டே இருக்கும். அதற்கு குப்பைக் கூடையின் அடியில் எலுமிச்சைத் தோலைப் போட்டு வைத்தால் துர்வாடை வீசாது.
