/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
திருநீறு பிரசாதம் வழங்காத சிவன் கோவில்!
/
திருநீறு பிரசாதம் வழங்காத சிவன் கோவில்!
PUBLISHED ON : பிப் 15, 2026

ஸ்ரீ காளஹஸ்தி காளத்திநாதர் ஆலயத்தில் திருநீறு வழங்கும் மரபு இல்லை. அதற்கு பதிலாக பச்சை கற்பூரத்தை பன்னீரில் கலந்து, அந்த தீர்த்தத்தை பிரசாதமாக சங்கு மூலம் பக்தர்களுக்கு வழங்குகின்றனர்
* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள தேவிகா புரத்தில் மலை மீதுள்ள கனககிரீஸ்வரர் ஆலய கருவறையில், கனககிரீஸ்வரர், காசி விஸ்வநாதர் என, இரண்டு சிவ லிங்கங்கள் உள்ளன
* தஞ்சாவூரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள தென்குடி திட்டத்தை வசிஷ்டேஸ்வரர் ஆலய கருவறை மேற் கூரையிலிருந்து, 25 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் இறைவன் திருமேனி மீது விழுந்து, இறைவனை நித்யாபிஷேகம் செய்யும் அற்புதம் நடக்கிறது
* ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்னேஸ்வரர் கோவிலில் உள்ள வில்வ மரத்தின் கீழ் உள்ள மண் சாந்தை உருண்டையாக உருட்டி பிரசாதமாக தருகின்றனர். இதில், சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால், கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.
- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

