
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயது, நாற்பத்து நான்கை கடந்தாலும், எப்போதும் புதுப்பொலிவுடன் வலம் வரும் வசந்த மலர்! என்றும் வாடாத மலர் வாரமலர்! அன்று முதல் இன்றுவரை சுவை மாறா சுவாரஸ்யம்! படிக்க படிக்க திகட்டாத தேனமுது! பரிசுகளை வாரி வழங்கும் பாரி வள்ளல்! அள்ள அள்ளக் குறையாத அற்புதப் புதையல்! காதலனைக் காணா மனம் போல், மறு ஞாயிறு வரை வாரமலர் இதழை காணா வாசகர்களின் மனம்! இன்னும் எத்தனை வரிகளில் எழுதினாலும், போதாது இதன் புகழ் பாட! வாரமலர் இதழுக்கும், வாசகர்களுக்குமான இந்தக் காதல் பந்தம் வற்றாமல் தொடரட்டும்! வாரமலர் இதழின் புகழ் வையகமெங்கும் ஓங்கட்டும்!
எஸ்.ஆஷிகா, அதிராம்பட்டினம்.

