
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாக இருந்தால், பச்சை அப்பளங்களை ஒரு நிமிடம் நீரில் போட்டு ஊறவைத்து அரைத்து, மாவில் கலந்து இட்லி சுட்டால், பூ மாதிரி இருக்கும்
* வாழைக்காயை சமைக்கும் போது மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்து கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படாது
* கோதுமையை லேசாக வறுத்து, மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் கெடாது
* சர்க்கரை அல்லது வெல்லப்பாகு செய்யும் போது பதம் வந்தவுடன், எலுமிச்சை சாறு விட்டால், பாகும் முற்றாது; அழுக்கையும் எடுத்து விடும்
* கறிவேப்பிலையை வறுத்துப் பொடி செய்து எண்ணெய், உப்பு சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வர, கூந்தல் வளரும்; கண் பார்வை பொலிவு பெறும்
* பீர்க்கங்காய் தோலுடன் புளி, உப்பு, மிளகாய், வறுத்த வேர்க்கடலை சேர்த்து அரைத்து கடுகு தாளித்து சட்னி செய்யலாம்.

