sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வேங்கை இலை நிறம் மாறுதலை கட்டுப்படுத்த கரைசல்

/

வேங்கை இலை நிறம் மாறுதலை கட்டுப்படுத்த கரைசல்

வேங்கை இலை நிறம் மாறுதலை கட்டுப்படுத்த கரைசல்

வேங்கை இலை நிறம் மாறுதலை கட்டுப்படுத்த கரைசல்


PUBLISHED ON : அக் 15, 2025

Google News

PUBLISHED ON : அக் 15, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேங்கை மர சாகுபடியில், இலை நிறம் மாறுதலை கட்டுப்படுத்த கரைசல் தயாரிப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:

நாற்று பண்ணைகளில், பதியன் போட்டிருக்கும் வேங்கை மரக்கன்றுகளில், இலைகளின் நிறம் மஞ்சளாக மாறும்.

இதற்கு, காரணம் சூரிய ஒளி நேரடியாக செடிகள் மீது படாதது; செடிகளின் அருகே தண்ணீர் தேங்குதல்; செடிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுதல்; சில நேரங்களில் மண்ணில் இருக்கும் காரத்தன்மை அதிகமாகும் போது, மஞ்சள் நிறத்திற்கு இலைகள் மாறிவிடும். சில மரக்கன்றுகள் பாதிக்கப்பட்டு, இறக்க நேரிடலாம்.

இதை தவிர்க்க, 5 கிராம் யூரியா,5 கிராம் இரும்பு சல்பேட், 5 கிராம் ஜிங்க் சல்பேட் மற்றும் ஒட்டு திரவத்தை கலக்கி, காலை மற்றும் மாலை நேரத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை இலைகள் மீது தெளிக்கலாம். 5 கிராம், நுண்ணுாட்ட கலவையை, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இதுதவிர, கையோலின் கிளே 5 கிராம், நுண்ணுாட்ட கலவை 5 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

இவ்வாறு கலந்து தெளிக்கும் போது, வேங்கை மரக்கன்றுகள் தரமானதாகவும் வீரியத்துடனும் வளரும் தன்மை கொண்டு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,

97910 15355.







      Dinamalar
      Follow us