sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வயநாட்டில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள்: விமானப்படையும் உதவுகிறது

/

வயநாட்டில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள்: விமானப்படையும் உதவுகிறது

வயநாட்டில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள்: விமானப்படையும் உதவுகிறது

வயநாட்டில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள்: விமானப்படையும் உதவுகிறது

2


UPDATED : ஜூலை 30, 2024 01:27 PM

ADDED : ஜூலை 30, 2024 11:03 AM

Google News

UPDATED : ஜூலை 30, 2024 01:27 PM ADDED : ஜூலை 30, 2024 11:03 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயநாடு: கேரளாவில் நிலச்சரிவில் 41 பேர் பலியான நிலையில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, வயநாடு மாவட்டத்தில் , 4 மணி நேரத்தில் அடுத்தடுத்து முண்டக்கை, மெப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் கடுமையான 3 நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட உடன் உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதனையடுத்து காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த 225 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவ அதிகாரிகள் குழு தலைமையில், 40 பேர் அடங்கிய குழவினர் மீட்பு பணிக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

குன்னூர் கண்டோன்மென்டில் இருந்தும் இரண்டு குழுவினர் வயநாடு விரைந்து உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே, விமானப்படைக்கு சொந்தமான ஏஎல்எச் மற்றும் எம்ஐஐ 7 ஹெலிகாப்டர்களும், சாரங் வகை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் முன்னின்று உதவி வருகின்றன.






      Dinamalar
      Follow us