/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரிகளுக்கான நீர்வரத்து வாய்க்கால் துார்வாரும் பணி
/
ஏரிகளுக்கான நீர்வரத்து வாய்க்கால் துார்வாரும் பணி
ADDED : நவ 20, 2024 07:18 AM

திருக்கனுார் : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் இருந்து புதுச்சேரி பகுதியான கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, திருக்கனுார், கொடாத்துார், கைக்கிலப்பட்டு கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு ராஜா வாய்க்கால் மூலம் நீர்வரத்து செல்கிறது.
புதுச்சேரி பொதுப்பணித் துறை நீர்பாசன பிரிவு மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இந்த நீர்வரத்து வாய்க்கால் போதிய பராமரிப்பு இல்லாததால், முழுதும் கோரைகள் மற்றும் செடிகள் வளர்ந்து, புதர்மண்டி காணப்பட்டது.
இதனால், மழைக்காலங்களில் ஏரிகளுக்கான நீர்வரத்து பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக தினமலரில் கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள், நீர்வரத்து ராஜா வாய்க்காலை பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரும் பணியினை துவங்கியுள்ளனர். இருப்பினும், கனமழைக்கு முன்பாக நீர்வரத்து வாய்க்காலை, கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தி, விரைந்து துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.