
'மனசாட்சி இப்படியெல்லாமா கேட்கும்' என்று 'மனசாட்சி' இன்றி கேட்பவர்களே... இக்கேள்விகளை கடந்து விடுங்கள்; 'என் தலையெழுத்தை நானே எழுதிக் கொள்ளும் வாய்ப்பே தேர்தல்' எனும் நம்பிக்கையுடன் 'மை' இட்டுக் கொண்டவர்களே... மனசாட்சிக்கு பதில் சொல்லுங் கள்...
1. 'வெயில் சூடு தாங்காத அளவிற்கு உடல் ஆரோக்கியம் கொண்டிருக்கும் தலைவர், 'ஏர் கூலர்' மேடையிலும், அதிகாலையிலும், இரவிலுமே முகம் காட்டிய தலைவர் நமக்காக எப்படி உழைப்பார்' என்று யோசித்தீர்களா?
2. 'என்னைப் போல சொந்தமாக கட்சி துவக்கி ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காண்பிக்கும் திராணி இருக்கிறதா என்று யாரையோ கேட்ட த.வெ.க., தலைவருக்கு, அந்த யாரோவால் உரிய பதில் தரப்பட்டதா' என்று சிந்தித்தீர்களா?
3. 'பா.ஜ., ஆளும் மாநிலங்களில் புல்டோசரால் முஸ்லீம் மக்களின் வீடுகள் இடிக்கப்படு கின்றன' என்று முதல்வர் சொன்னதையும், நம் மண்ணில் 'ஆக்கிரமிப்பு' எனச் சொல்லி கோவில்கள் இடிக்கப்பட்டது பற்றியும் யோசித்தீர்களா?
4. 'பா.ஜ.,வின் அடிமை பழனிசாமி' என்ற சிறுபிள்ளைத்தனமான கிண்டலை ரசித்த நீங்கள், ' ஒரு குடும்பத்தின் தந்தை, மகன், பேரனுக்கு கும்பிடு போட்டு வாழும் அந்த 232 பேரை என்னவென்று நாம் அழைப்பது' என சிந்தித்தீர்க ளா?
5. 'துண்டு சீட்டு அவசியமின்றி பேசத் தெரிந்த, தமிழக மக்களின் தேவையறிந்த, 'இலவசம் தந்து என் மக்களை இழிவுபடுத்த மாட்டேன்' எனும் கொள்கை கொண்ட தலைவருக்கு ஏன் வாய்ப்பு மறுக்கிறோம்' என யோசித்தீர்களா ?
6. 'நான் உ னக்கு தரப்போகும் பணத்தில் நீ விரும்பியதை வாங்கிக் கொள்ளலாம் என்று எனக்கு ஆசை காட்டுபவர், என் குடும்பத்து ஆண்களின் பொருளாதார இயலாமைக்கு எவ்வகையில் காரணமானவர்' என்று சிந்தித்தீர்க ளா ?
7. 'இந்தியாவிலேயே 'திராவிட ஆட்சி' நடக்கும் நம் தமிழகத்தில்தான் அதிகமான கோவில்கள் இருக்கின்றன என பிரசாரம் செய்த முதல்வர், ஏன் தமிழ் புத்தாண்டுக்கும் வாழ்த்து சொல்லவில்லை' என்பதையாவது யோசித்தீர்களா?
7 ½ எழுதிய தலையெழுத்தில் திருப்தியா?

