sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 12, 2026 ,மார்கழி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

வா வாசி யோசி...

/

வா வாசி யோசி...

வா வாசி யோசி...

வா வாசி யோசி...


PUBLISHED ON : ஜன 04, 2026

Google News

PUBLISHED ON : ஜன 04, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'உங்களின் வாழ்க்கை மீது தாக்கம் செலுத்துவது யார்... எது?' என்ற கேள்விக்கு, சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சொன்னவை இவை!

'இவர்கள் தேசத்தின் தேவைகள்' என்பதை உணர்த்துகின்றன இப்பதில்கள்...

* 'என்னை வழிநடத்தும் சக்தி கவிதைகளுக்கு உண்டு; 'இதுவரை மலர்ந்து இருந்ததற்கான எந்த தற்பெருமையும் உதிர்ந்த பூவிடம் இல்லை; அது அப்படியே இருந்தது, ஒரு விடையை சரியாக எழுதிவிட்டது போல!' - கடமை செய்ததற்கு பாராட்டு எதிர்பார்க்கக் கூடாதென எனக்கு உணர்த்தியது கல்யாண்ஜியின் இக்கவிதை!'

- இ.இசக்கியம்மாள்.

*'படித்தது கட்டடக்கலை என்றாலும், நுாறாண்டுகளாக வழக்கத்தில் இல்லாத யாழ், குடமுழா இசைக்கருவிகள் பற்றி ஆராய்ந்து அதை மீண்டும் உருவாக்கி, இதற்காக 'உரு' எனும் நிறுவனத்தை துவக்கிய தருண் சேகர் என் குரு; 'விருப்பமுள்ளதை தேடினால் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்' என்பதை எனக்கு உணர்த்தியவர்!'

- வே.ஐஸ்வர்யா.

* 'பெற்றோர் பிரிவால் விடுதியில் தங்கி பள்ளிக்கல்வி முடித்தவர் என் பேராசிரியர் குறளரசன்; உதவித்தொகையில் உயர்கல்வி, குற்றவியல் துறையில் முனைவர் பட்டம்; இன்று, உலகப் புகழ்பெற்ற பெல்ஜியம் கென்ட் பல்கலையில் அவர் பேராசிரியர்; தன் துயரங்களை நினைத்தே காலம் கடத்த வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்து சாதித்த உண்மையான பலசாலி!'

- ரா.நந்தகுமார்.






      Dinamalar
      Follow us