
சென்னை, கொரட்டூர், பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவியரான இவர்களின் மனதை, திரை நட்சத்திரங்கள் ஈர்ப்பதில்லை; அரசியல் குரல்கள் வசீகரிப்பதில்லை; பின், இவர்களை ஆளுமை செய்பவர்கள் யார்?
'தனது 'டாக்டர் ஆன் வீல்ஸ்' ஆம்புலன்சில் மதுரை சுற்றுவட்டாரத்தில் தினசரி 150 கி.மீ., பயணித்து, ஐந்து ஆண்டுகளில் 5,000ற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடு தேடிச் சென்று சிகிச்சை அளித்திருக்கும் 34 வயது மருத்துவர் சுவாமிநாதன்; முதியவர்களின் புன்னகையில் மகிழும் மனிதாபிமானி; இவருக்கே என் தலை வணங்கும்!'
எ.சவுந்தர்யா, பி.காம்.,
'பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்த போதும் பிரிட்டிஷ் அரசு தனக்களித்த பதவியை உதறி, 'ஜாலியன் வாலாபாக்' படுகொலைக்கு நீதி கேட்டு இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதம் செய்த இந்திய வழக்கறிஞர் சி. சங்கரன் நாயர்; இவர் நடத்திய நீதிப்போரே பிரிட்டிஷ் அரசின் இப்பாதகச் செயலை உலகறியச் செய்த. இவரே, என் குரு!'
சு.சாக் ஷி, பி.ஏ.,
'எங்கள் பகுதியின் சிறிய டிபன் கடை முதலாளி அவர்; கணவர் கைவிட்ட சூழலில் கலங்கி நிற்காது உழைத்து, தனியார் பள்ளியிலும், பொறியியல் கல்லுாரியிலும் தன் இரு மகன்களை படிக்க வைத்து, 'ஒயிட் காலர்' பணியில் அமர்த்தியிருக்கும் அம்பிகா அம்மா; உழைப்பின் அர்த்தத்தை எனக்கு உணர்த்திய இவரே என் வழிகாட்டி!'
இ.வசிஷ்டா, பி.காம்.,

