
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. பழைய இரும்பு உதிரிப் பொருள்களை விற்பனை செய்ததன் மூலம், மத்திய அரசின் எந்தத் துறைக்கு, ரூ.6,813 கோடி வருவாய் கிடைத்துள்ளது?
அ. பாதுகாப்பு
ஆ. சுகாதாரம்
இ. ரயில்வே
ஈ. வெளியுறவு
2. 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில், 2021ஆம் ஆண்டை விட, எத்தனை லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர்?
அ. 10 லட்சம்
ஆ. 20 லட்சம்
இ. 15 லட்சம்
ஈ. 8 லட்சம்
3. மத்திய அரசின் எந்தத் திட்டத்தின் கீழ், 2,500 கைவினைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன?
அ. ஆயுஷ்மான் பாரத்
ஆ. பி.எம். விஸ்வகர்மா
இ. உஜ்வாலா யோஜனா
ஈ. ஜல் ஜீவன் மிஷன்
4. எகிப்தில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், பெண்களுக்கான 50 மீ. ரைபிள் பிரிவில், மொத்தம் 354.6 புள்ளிகள் பெற்று, தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை?
அ.பிராச்சி
இ. சுவேதா
ஆ. சௌமியா
ஈ. தருணிகா
விடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஆ, 4. அ.

