PUBLISHED ON : மார் 30, 2026
1. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
(சரி / தவறு)
2. 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற சட்டம் 1989ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது.
(சரி / தவறு)
3. சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) தபால் மூலம் வாக்களிக்க அனுமதி உண்டு.
(சரி / தவறு)
4. தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் 'நிர்வாசன் சதன்' (Nirvachan Sadan) என்று அழைக்கப்படுகிறது.
(சரி / தவறு)
5. இந்தியத் தேர்தல் ஆணையத் தலைவர், உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(சரி / தவறு)
விடைகள்:
1. தவறு. மாநிலங்களுக்குள் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை மட்டுமே மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும்.
2. சரி.
3 தவறு. தற்போதுள்ள விதிகளின்படி, என்.ஆர்.ஐ. வாக்காளர்கள் நேரில் வந்து மட்டுமே வாக்களிக்க முடியும்.
4. சரி.
5. சரி.

