sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

அம்மாவின் சாதனை!

/

அம்மாவின் சாதனை!

அம்மாவின் சாதனை!

அம்மாவின் சாதனை!


ADDED : நவ 11, 2014 03:44 PM

Google News

ADDED : நவ 11, 2014 03:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலகுழந்தைகள் நல்லவர்களாக வளரலாம். ஒரு சிலர் இளமையிலேயே கெட்டுப் போகிறார்கள். இது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது. ஜோசப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள்.

ஜோசப்பின் தாய் அவரை நல்ல முறையில் வளர்க்க கடும் முயற்சி மேற்கொண்டார். 17 வயது வரை எப்படியோ தாக்குப் பிடித்த அந்தத்தாய், கல்லூரியில் அவரை சேர்த்த பிறகு, திணற ஆரம்பித்தார். கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் ஜோசப் குடிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் பணம் இல்லாமல் போகவே, ஒரு நண்பனிடம் தன்னிடமிருந்த பைபிளை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தில் குடித்தார். அவர் அடகு வைத்த பைபிளின் அட்டையில் சில வசனங்களை அந்த தாயார் குறித்து வைத்திருந்தார். தன்னுடைய மகன் பைபிளைப் புரட்டாவிட்டாலும், அட்டையின் மீதுள்ள வாழ்க்கைக்குப் பயன் தரும் வசனங்களையாவது படிப்பார் என்பது அந்தத்தாயின் நம்பிக்கை. ஆனால், மகன் திருந்தும் முன்பே அந்த தாய் காலமாகிவிட்டார்.

ஜோசப் எப்படியோ படித்து டாக்டராகி விட்டார். ஒருநாள் நோயாளி ஒருவர் அவரிடம் சிகிச்øŒக்கு வந்தார்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை, எங்கோ பார்த்ததுபோல் ஜோசப்பிற்கு தோன்றியது.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. கண் விழித்த அவர், 'எனது பையிலிருக்கும் அந்த புத்தகத்தை சீக்கிரமாகக் கொண்டு வந்து தாருங்கள்!' என முனகினார்.

ஜோசப் புத்தகத்தை எடுக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அந்த நோயாளி இறந்திருந்தார். அவ்வளவு ஆவலுடன் அந்த நோயாளி எடுக்கச் சொன்ன புத்தகம் என்னவாக இருக்கும்? என ஜோசப் அதை உற்று நோக்கினார். புத்தகத்தின் அட்டையில் தனது தாயின் கையெழுத்து இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

அதில் பைபிள் வசனங்கள் சில எழுதப்பட்டிருந்தன. அது, தான் அடகு வைத்த பைபிள் என்பதும், இறந்து போனவர் தனது நண்பர் என்பதும் அவருக்குத் தெரியவந்தது. அந்த வசனங்களை அவர் அன்றுதான் வாசித்தார். குடிப்பழக்கத்தை மறந்தார். தன் தாயை நினைத்து கண்ணீர் வடித்தார். அவரைப் பாடாய்ப்படுத்தியதற்காக கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டார்.

கதறியழுதார்.

பெற்றவர்களின் எண்ணங்களும் ஜெபமும் காலம் கடந்தாவது சாதிக்கவே செய்யும். அது நம்மைத் திருத்தும். நல்வாழ்வு வாழச் செய்யும்.






      Dinamalar
      Follow us