sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

மறக்கக்கூடாத வசனம்!

/

மறக்கக்கூடாத வசனம்!

மறக்கக்கூடாத வசனம்!

மறக்கக்கூடாத வசனம்!


ADDED : டிச 02, 2014 12:18 PM

Google News

ADDED : டிச 02, 2014 12:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு ஆற்றில் மழை காரணமாக கடும் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.

ஆற்றங்கரையோரமாக நடந்து வந்த ஒரு சிறுமி, தண்ணீரில் தவறி விழுந்து விட்டாள். ஆற்றில் வேகமாக அடித்துச் செல்லப்பட்ட அவளை, கரையில் நின்ற மைக்கேல் என்பவர் பார்த்தார். சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்தார். வெள்ளம் அவரையும் இழுத்துச் சென்றது. எப்படியோ சிறுமியை தட்டுத்தடுமாறி பிடித்தார். ஆனாலும், கரைக்கு வர முடியாமல் அவரும் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தார்.

அந்நேரத்தில் பாலம் ஒன்றில், அவர்கள் மோதி நின்றனர். பாலமும் வெள்ளத்தில் சேதமடைந்திருந்தது. ஆனால் நீட்டிக் கொண்டிருந்த கம்பி ஒன்றை, மைக்கேல் பற்றிக்கொண்டார். கரையில் நின்ற மற்றவர்கள் கலங்கி நின்றார்கள். மீட்புப் படையினருக்கு தகவல் சென்றது. அவர்கள் வேகமாக வந்து இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். கரைக்கு வந்த பிறகு, மக்கள் மைக்கேலைப் பாராட்டினார்.

அவரைப்பற்றி விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?

'எனக்கு நீச்சல் தெரியாது!' என்பதுதான்.

ஆபத்தான நேரத்தில் அதை எதிர்த்துப் போராட கற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஆபத்தைச் சமாளிக்கத் தெரியாது என தயங்கி நிற்கக் கூடாது.

''நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள்; அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடே கூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை,'' என்கிறது பைபிள்.

இந்த வசனத்தை வாழ்நாள் முழுவதும் மறக்காதீர்கள்.






      Dinamalar
      Follow us