
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தந்தையை இழந்தவன் சிறுவன் ஜேம்ஸ். அவனுக்கு அக்கா, தங்கை, தம்பி என மூன்று சகோதரர் இருந்தனர். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தான். கம்ப்யூட்டர் சென்டரில் கற்றுக் கொண்டே அங்கேயே பகுதி நேர வேலையும் பார்த்தான். பிளம்பிங், எலக்ட்ரிக் பணிகளையும் செய்வான்.
என்னென்ன வேலை செய்தான் என்பதற்கு கணக்கே கிடையாது. கடின உழைப்பால் தன் உடன்பிறந்த மூவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தான். தானும் போட்டித் தேர்வு எழுதி வங்கி மேலாளராக அமர்ந்தான்.
'என் வளர்ச்சிக்கு காரணம் புத்தகம். ஒவ்வொரு எழுத்தாளரின் கருத்துக்கள் துன்பத்தில் ஊன்றுகோலாக இருந்தது. வளர்ச்சிக்கு துாண்டுகோலாக இருந்தது' என நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தான்.
'புத்தகம் படித்தலே புரட்சி செய்யும்' என்பதற்கு எடுத்துக்காட்டு ஜேம்ஸ்.

