ஒருமுறை அமெரிக்காவின் வடகாரலினா மாநிலம் ராலி நகரில் அறிவியல் கருத்தரங்கு நடக்க இருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் விஞ்ஞானி பெயின்மன். அதை அவர் மறந்ததால் கடைசி நேரத்தில் பரபரப்பாக புறப்பட்டதில் அழைப்பிதழை எடுக்கவில்லை.
ராலி நகரில் உள்ள மூன்று பல்கலைகளில் கருத்தரங்கு எங்கு நடக்கிறது என தெரியாமல் குழம்பினார். இருந்தாலும் விமான நிலையத்தில் இறங்கியதும் ஒரு டாக்சிகாரரை அணுகி, ' படித்த இளைஞர்கள் உங்களிடம் பல்கலை செல்வதற்காக இன்று வந்திருப்பார்களே... அது பற்றி சொல்ல முடியுமா' எனக் கேட்டார்.
'ஆமாம். பலரை இன்று அழைத்துச் சென்றேன்' என்றார் அவர். 'என்னையும் அங்கு அழைத்துச் செல்லுங்கள்' என்றார் விஞ்ஞானி. ஞாபகமறதியால் சிரமப்பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் வாழ்ந்தவர் பெயின்மன். நம் குறையை பிறர் அறியாதபடி நாசூக்காக இருப்பதும் கெட்டிக்காரத்தனமே.

