நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசிரியர் கேள்வி கேட்டால் புத்திசாலி மாணவர்கள் சரியான பதில் சொல்வார்கள். சிலர் பதில் தெரியாமல் முழிப்பார்கள். தன்னம்பிக்கை குறைவும், பயமும் தான் இதற்கு காரணம். இந்த உலகில் வாழும் போது வேண்டுமானால், கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பி விடலாம்.
ஆனால், என்றாவது ஒருநாள் தேவனின் முன்னால் செல்வோம். அவர் நம்மிடம் பல கேள்விகளைக் கேட்பார். “நீ படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவில்லை. பெற்றோரை ஏன் அரவணைக்க வில்லை. மனதில் சுயசிந்தனையை ஏன் வளர்த்துக்கொள்ளவில்லை.
'பயப்படாதே... நான் உன் அருகில் இருக்கிறேன்' என்று சொல்லியதை காதில் ஏன் வாங்கவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்,” என கேட்கும் போது மவுனமாக இருக்க முடியாது.
இதற்கு பதில் சொன்ன பிறகே, தேவன் ஆசிர்வாதம் அளிப்பார் என்பதை மறந்து விடாதீர்.