நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
5ம் வகுப்பு படிக்கும் காபிரியேல் மிகவும் சுட்டித்தனம் செய்பவன். திடீர் என ஒருநாள் ஆசிரியரும் பெற்றோர்களும் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களை பற்றி நலம் விசாரித்தனர் பெற்றோர்கள்.
ஆசிரியரிடம் கபிரியேல் சுட்டித்தனம் செய்வானே எப்படி கெட்டிக்காரனாக இருக்கிறான் என அவனது பெற்றோர்கள் கேட்டனர். அவரும் எந்த சேட்டையும் அவன் செய்யவில்லை. நன்றாக படிக்கிறான் என்றார். தன்னைப்பற்றி நல்ல விதமாக சொன்ன ஆசிரியரை ஆச்சரியமாக பார்த்தான் காபிரியேல். அன்றிலிருந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
தீமையின் வசம் இருந்தாலும் நல்ல வார்த்தை சொல்லுங்கள், கேளுங்கள். நிச்சயம் வெற்றி அடைவீர்கள் என்கிறது பைபிள்.