sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

புரிந்து கொள்ள முடியாதவர்

/

புரிந்து கொள்ள முடியாதவர்

புரிந்து கொள்ள முடியாதவர்

புரிந்து கொள்ள முடியாதவர்


ADDED : ஏப் 25, 2016 01:07 PM

Google News

ADDED : ஏப் 25, 2016 01:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலைவாசி ஒருவன், முதன்முறையாக அடிவாரத்திற்கு வந்தான். அவனை அவனது நண்பன் பல இடங்களுக்கும் அழைத்து சென்றான்.

அவர்கள் ஒரு கடற்கரைக்கு வந்தனர்.

கடலைப் பார்த்ததும் மலைவாசிக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அவன் அதுவரையிலும் கடலைப் பார்த்ததே இல்லை. முதலில் அவனுக்கு பயமாக இருந்தாலும் கடல் அலைகள் அவனது பாதத்தை வருடியதும் பரவசம் அடைந்தான். தண்ணீரில் குதித்து விளையாடினான்... குளிக்கவும் செய்தான்.

கடலின் முடிவில் வானமும் கடலும் சேர்வது போன்ற தோற்றத்தைக் கண்டான். 'வானம் எப்படி கடலோடு இணைகிறது?'' என ஆச்சரியமாக கேட்டான். இவ்வளவு தண்ணீர் இங்கே எப்படி வந்து தேங்கியது என சிந்திக்க ஆரம்பித்தான். எல்லாமே புரியாத புதிராக

இருந்தது. நீண்ட நேரமாக கடலின் அழகை ரசித்துவிட்டு, ஒரு சின்ன ஜாடியில் கடல் நீரை ஊற்றி நிரப்பினான்.

அதைப்பார்த்த நண்பன், 'ஏன் தண்ணீரை நிரப்புகிறாய்?'' எனக் கேட்டான்.

'கடல் என்றால் என்னவென்றே தெரியாத என் மனைவி, குழந்தைகளுக்கு இந்த தண்ணீரை கொண்டுபோய் காட்டப்போகிறேன்,'' என்றான்.

இவனது செய்கை போல, உலகத்தில் உள்ள அனைவருமே கடவுளை மிகச்சிறியவராக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஜாடி கடல் நீர் கடலாகிவிட முடியாது. கடவுளும் கடலை போன்றவர். அவரை நமது குறுகிய அறிவால் புரிந்துகொள்ள முடியாது. அவரைப் பற்றி எத்தனை புத்தகங்கள் எழுதினாலும், எவ்வளவுதான் பேசினாலும் அது கடல் தண்ணீரை ஜாடியிலே மொண்டு சென்ற கதையாகத்தான் இருக்கும்.






      Dinamalar
      Follow us