sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

ஒற்றுமையாக வாழ்வோம்

/

ஒற்றுமையாக வாழ்வோம்

ஒற்றுமையாக வாழ்வோம்

ஒற்றுமையாக வாழ்வோம்


ADDED : ஜூன் 11, 2021 05:09 PM

Google News

ADDED : ஜூன் 11, 2021 05:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிறங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது. முதலில் நீலம் எழுந்து ''உலகமே என்னுடைய நிறத்தால் ஆனது. கடல், வானம் எங்கும் என் நிறமே. நானே உலகில் உயர்ந்தவன்.'' என்றது.

அடுத்ததாக சிவப்பு,'' எல்லா உயிர்களின் உடம்பில் ஓடும் குருதி என் நிறமே. ஆபத்து காலத்தில் அபாய எச்சரிக்கை செய்ய என்னையே பயன்படுத்துவர்''

பரபரப்புடன் இருந்த பச்சை, ''உலகமே என்னைத் தான் விரும்பும். வளத்தை குறிப்பது என் நிறமே.'' என்றது.

தாமதமாக வந்த வெள்ளையோ, '' வெள்ளைக்கு இல்லை கள்ளச்சிந்தை. துாய்மை என்ற எண்ணமே என்னிலிருந்து எழுந்தது தான். பலர் கூடும் சபையில் எனக்கு தனிமதிப்பு உண்டு'' என்றது.

இப்படி நிறங்கள் தங்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டு செல்ல இறுதியில் கைகலப்பு ஏற்பட்டது. முடிவாக அவை ஆண்டவரிடம் முறையிட்டன.

அப்போது வானில் மின்னலுடன் இடி முழங்கியது. பயந்து போன நிறங்கள் ஒன்றோடொன்று இணைந்து வானவில்லாக மாறி காட்சியளித்தன.

''நீங்கள் சண்டையிடுவதில் என்ன பெருமை இருக்கிறது. ஒருவரோடு ஒருவர் இணைந்து இருப்பதில் எத்தனை அழகு பாருங்கள். எப்போதும் சமாதானமாக வாழுங்கள்'' என்றார்.

பிறரோடு இணைந்து ஒற்றுமையாக வாழ்வதுதான் பெருமை சேர்க்கும் என்பதை உணர்வோம்.






      Dinamalar
      Follow us