ADDED : செப் 10, 2021 09:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரேக்க நாட்டை அலெக்ஸாண்டர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் இந்தியா மீது படையெடுப்பதற்கு முன், தியோஜினிஸ் என்னும் ஞானியை சந்திக்க சென்றார். அப்போது ஞானி அமைதியாக உள்ளதை கண்டு திகைத்தார்.
''என்னிடம் செல்வம் இருந்தும் நான் பதட்டமாக இருக்கிறேன்.
ஆனால் நீங்களோ.. எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறீர்களே... இதற்கு என்ன காரணம்'' என ஞானியிடம் கேட்டார் அலெக்ஸாண்டர்.
''எனக்கு எந்த ஆசையும் இல்லை. எதுவும் என்னுடையது இல்லை என்று நினைப்பதே என் பலம். நான் என்னை வென்றுவிட்டதால் உலகை வென்றுவிட்டேன்'' என்று சிரித்தார்.
ஞானியிடமிருந்து இப்படி ஒரு பதிலை கேட்ட அலெக்ஸாண்டர் ஆச்சர்யப்பட்டார்.