sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

பிறருக்காக உயிர் கொடுப்போம்!

/

பிறருக்காக உயிர் கொடுப்போம்!

பிறருக்காக உயிர் கொடுப்போம்!

பிறருக்காக உயிர் கொடுப்போம்!


ADDED : ஜூன் 12, 2016 03:11 PM

Google News

ADDED : ஜூன் 12, 2016 03:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆபத்தான காலத்தில் உயிர்த்தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என பைபிள் கூறுகிறது.

ஒரு குடும்பத்தினர் அழகான நாயை வளர்த்தனர். ஒருநாள் காலையில் அந்த நாய் இறந்து கிடந்தது. அக்குடும்பத்தினர் மிகவும் வருந்தினர். சற்று தொலைவில் ஒரு கருநாகம் இறந்து கிடப்பதையும் அவர்கள் கண்டார்கள்.

நடந்தது இதுதான்.

அந்த பாம்பு வீட்டினுள் நுழைய முயன்றது. அதை நாய் தடுத்தது. நாகத்திற்கு கோபம் வந்தது. அது சீறி எழுந்து நாயை பலமுறை கொத்தியது. என்றாலும் நாய் பாம்பை உள்ளே விடவில்லை. இறுதியில் அது நாகத்தின் கழுத்தை கடித்து குதறியது.விஷம் ஏறி இறந்து கிடந்த அந்த நாயின் அன்பை நினைத்து அக்குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர். இதைப்போலவே பாவத்தின் கொடிய விஷத்திலிருந்து மக்களை மீட்க இயேசுநாதர் தனது ரத்தத்தை சிந்தி உயிரைத் தியாகம் செய்தார்.

இதையே, “நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்கிறது பைபிள்.






      Dinamalar
      Follow us