sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

நீ விலை மதிக்க முடியாதவன்

/

நீ விலை மதிக்க முடியாதவன்

நீ விலை மதிக்க முடியாதவன்

நீ விலை மதிக்க முடியாதவன்


ADDED : ஆக 15, 2021 10:00 AM

Google News

ADDED : ஆக 15, 2021 10:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்தாம் வகுப்பு படிக்கும் டேனியலுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர்.

''உங்கள் வாழ்வின் மதிப்பு என்ன'' என கேள்வி கேட்டார்.

மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

''இதுதான் இந்த வார பிராஜெக்ட். இதற்கு சரியாக பதில் தருபவருக்கு பரிசு உண்டு'' என்று சொல்லி நகர்ந்தார்.

'என்னடா இது புரியாத கேள்வியாக இருக்கிறதே. இதை யாரிடம் கேட்டால் விடை கிடைக்கும்' என்று யோசித்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் டேனியல். அப்போது அவனது பாட்டி சமைத்து கொண்டிருந்தார்.

''பாட்டி.. இன்னிக்கு.. டீச்சர் ஒரு கேள்வி கேட்டாங்க.. ஒன்னுமே புரியல.. நீங்கதான் பதில் சொல்லனும்'' என்று அந்தக் கேள்வியை சொன்னான்.

''ஒரு நிமிஷம் பொறு. இதோ வந்துடுறேன்'' என்று அறைக்குள் சென்றார்.

சிறிய நகைப் பெட்டியை பேரனிடம் நீட்டினார். அதற்குள் ஒரு கல் இருந்தது.

''இது சாதாரண கல் அல்ல. வைரக்கல் இது. வாழ்வின் மதிப்பு என்னன்னு கேட்டேல்ல.. அதுக்கு முன்னாடி இந்தக் கல்லோட மதிப்பு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு வா... உனக்கு விடை கிடைக்கும். எக்காரணம் கொண்டும் இதை விற்கக்கூடாது'' என்றார் பாட்டி.

அவனது கண்ணுக்கு முதலில் தென்பட்டார் ஒரு பழவியாபாரி.

''ஐயா.. இந்தக் கல் என்ன விலையிருக்கும்'' என்று கேட்டான்.

''அப்படி ஒண்ணும் விசேஷமான கல்லாத் தெரியலையேப்பா. உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. இந்தக் கல்லைக் குடு. அதுக்கு பதிலா இரண்டு கிலோ ஆப்பிள் தர்றேன்'' என்றார்.

பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

அடுத்து அரிசி கொள்முதல் செய்யும் வியாபாரியிடம் சென்றான்.

''ஐயா...இது எவ்வளவு மதிப்பு பெறும்'' என்று கேட்டான்.

கல்லை உருட்டி புரட்டி பார்த்தார் வியாபாரி ''இதுக்கு ஈடா ஒரு மூடை அரிசி தருகிறேன். வாங்கிட்டுப்போ'' என்றார்.

அங்கிருந்தும் நகர்ந்தான்.

கடைசியாக நகைக் கடைக்காரர் ஒருவரிடம் கல்லை காட்டினான்.

''தம்பி இந்தக்கல் யாருடையது. இது

10 லட்ச ரூபா பெறுமானம் கொண்டதாச்சே.. இது எப்படி உங்க கைக்கு வந்துச்சு'' என்றார் சந்தேகத்துடன். அவர் சொன்னதைக் கேட்டு திகைத்துப் போனான்.

''ஐயா.. இது என் பாட்டியோடது. இதன் மதிப்பு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்'' என்ற சொல்லி வீட்டுக்கு வந்து பாட்டியிடம் நடந்ததைக் கூறினான்.

''கண்ணு....ஒவ்வொரு வியாபாரியும் இந்த கல்லுக்கு ஒரு விலையைச் சொன்னார்கள். அது அவங்க தப்பில்லை. தங்களுக்குத் தெரிஞ்சத வச்சு சொல்லியிருக்காங்க. அந்தக் கல் மாதிரிதான் நீயும் விலைமதிக்க முடியாதவன்'' என்றார். வகுப்பறையில் பாட்டியின் பதிலை சொல்லி பரிசை தட்டிச்சென்றான் டேனியல்.

நம்மில் பலருக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரிவதில்லை. தங்கள் மதிப்பை தாங்களே உணராதவர்களாகத்தான் பலரும் இருக்கிறோம்.






      Dinamalar
      Follow us