/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கட்டுரைகள்
/
நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்
/
நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்
ADDED : ஆக 04, 2017 12:34 PM

பைபிள் அறிவிக்கும் போதனைகளை படியுங்கள்.
* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி கூடுதலாகவும் கொடுக்கப்படும்.
* மண் மண்ணுக்குள் திரும்பிப்போகும். கடவுள் கொடுத்த ஆவி அவரிடமே திரும்பிப் போகும்.
* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
* வானத்தின் உயரம், பூமியின் ஆழம், ராஜாக்களின் அந்தரங்கம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய முடியாது.
* மாபெரும் மனிதர்கள் அனைவருமே அறிஞர்களாக இருந்து விடுவதில்லை.
* அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும். முட்டாள்களின் பாட்டைக் கேட்பதை விட, அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் அறிவுள்ளவன் வார்த்தைகளை அடக்கிக் கொள்வான்.
* எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால் அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருளாகும்.
* பலமும், மானமுமே ஒரு பெண்ணின் ஆடைகள்.