
* எந்த நிலையில் இருந்தாலும் திருப்தியோடு இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
* வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளோ என்றும் அழியாது.
* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த மனதைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், நிம்மதியும், அமைதியும் உள்ள ஜீவனைக் கொடுத்திருக்கிறார்.
* தர்மம் தான் ஒரு தேசத்தை உயர்த்துகிறது. ஆனால் பாவமோ எந்த ஜனங்களுக்கும் இழிவைத் தரும்.
* அறிவு கர்வத்தால் வீங்கும். அன்போ நன்மையை பெருக்கும்.
* பொல்லாத நாக்கு உள்ளவன் பூமியில் நிலைப்பதில்லை.
* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் தேர்ந்தெடுங்கள்.
* நல்லவரை ஆண்டவர் பசியால் வருந்த விட மாட்டார். தீயவர்கள் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்கமாட்டார்.
* தேனை மிகுதியாக உண்பது நல்லது அல்ல; தற்புகழை நாடுவதும் நல்லது அல்ல.
* நம்பிக்கையில் ஆனந்தம் அடையுங்கள். துன்பத்தில் பொறுமையாய் இருங்கள்.

