sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கருடன் 12 அரிய தகவல்கள்

/

கருடன் 12 அரிய தகவல்கள்

கருடன் 12 அரிய தகவல்கள்

கருடன் 12 அரிய தகவல்கள்


ADDED : ஆக 07, 2019 08:27 AM

Google News

ADDED : ஆக 07, 2019 08:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.7- ஜெயந்தி

* மகாவிஷ்ணுவின் இரண்டு திருவடிகளையும் கருடன் தன் கைகளால் தாங்கியபடி வரும் காட்சியே கருட சேவை. மகாவிஷ்ணு, கருடன் அருள் ஒரே நேரத்தில் கிடைப்பது சிறப்பு.

* 'திருமாலும் கருடனும் ஒருவரே' என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வம் கூறுகிறது.

*கருடனின் மனைவிகள் ருத்ரா, சுகீர்த்தி.

* ஏகாதசி, திருவோண நாட்களில் கருடனை வழிபட்டால் நோய் தீரும்.

* கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்று கருடனுக்கு பல பெயர்கள் உண்டு.

* வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் உள்ள மூலைக் கருடன் சிறப்பு மிக்கவர். இவருக்கு சிதறுகாய் உடைத்தால் தீமை அகலும். தடை நீங்கும்.

* மகாபாரதப் போரில் கடைசி நாளில் கருட வியூகம் அமைத்து போர் நடந்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

* வைகுண்டத்திலிருந்து கருடனால் கொண்டு வரப்பட்ட வைரமுடி, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் உள்ளது. பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை இங்கு நடக்கிறது.

* ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ரெங்கமன்னார், ஆண்டாள், கருடனுடன் ஒரே ஆசனத்தில் காட்சி தருகின்றனர். இங்கு பெருமாளுக்கு, மாமனார் ஸ்தானத்தில் கருடன் இருக்கிறார்.

* திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சியாகும்.

* கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடியில் கருடாழ்வார் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கிய நிலையில் இருக்கிறார்.






      Dinamalar
      Follow us