sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

அம்மாடியோவ்... அண்ணாமலை

/

அம்மாடியோவ்... அண்ணாமலை

அம்மாடியோவ்... அண்ணாமலை

அம்மாடியோவ்... அண்ணாமலை


ADDED : டிச 13, 2024 07:59 AM

Google News

ADDED : டிச 13, 2024 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.13., 2024 - திருக்கார்த்திகை

* திருவண்ணாமலை கோயிலின் பரப்பு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி (24 ஏக்கர்).

* 171 அடி உயரம் கொண்டது அம்மணியம்மாள் கோபுரம். விஜயநகர மன்னர்களால் தொடங்கிய இந்த கோபுரப்பணி, பாதியில் நின்றது. இதைக் கட்டி முடித்த அம்மணியம்மாளின் பெயரே தற்போது அழைக்கப்படுகிறது.

* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில், அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை 1997 டிச.12ல் அஞ்சல்துறை வெளியிட்டது.

* திருமூலர் பாடிய திருமந்திரத்தில் அடி முடி தேடிய திருவண்ணாமலை வரலாறு குறித்த ஒன்பது பாடல்கள் உள்ளன.

* ஓய்வில்லாமல் அன்னதானம் அளிக்கும் மடம் திருவண்ணாமலை திருவூடல் தெருவிலுள்ள ஓயாமடம்.

* செவ்வாயன்று திருவண்ணாமலையை சுற்றினால் மோட்சம் கிடைக்கும் எனச் சொன்னவர் மகான் சேஷாத்ரி சுவாமிகள்.

* லிங்கோத்பவர் தோன்றிய தலம் அண்ணாமலை. கருவறையின் பின்புறம் இவரது சன்னதி உள்ளது.

* திருவண்ணாமலையின் தலவிருட்சம் மகுட மரம்.

* அக்னி நட்சத்திர காலத்தில் அண்ணாமலையாருக்கு வாசனை திரவியம் கலந்த நீரால் அபிஷேகம் செய்வர். தயிர் சாதம் படைத்து, நீர் சொட்டும் தாரா பாத்திரத்தை லிங்கத்தின் உச்சியில் வைப்பர்.

* ரமணாசிரம வளாகத்தில் தலைவலி சாமியின் சமாதி உள்ளது. தலைவலி தீர இதை சுற்றுகின்றனர்.

* கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும், தை மூன்றாம் தேதியும் அண்ணாமலையார் கிரிவலம் வருவார்.

* மலை மீதுள்ள முலைப்பால் தீர்த்தத்தை சீர்படுத்தியவர் நரிக்குட்டி சுவாமிகள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்வதரான இவர் சிவபக்தராக மாறினார். தமிழிலும் பேசுவார்.

* தென்கைலாயம் என திருவண்ணாமலைக்கு பெயர் உண்டு.

* இங்கிலாந்து அறிஞர் பால்பிரண்டன் எழுதிய நுாலில் அண்ணாமலையார், மகான் ரமணர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

* திருவெம்பாவை பாடலை மாணிக்கவாசகர் பாடிய தலம் திருவண்ணாமலை.

* அண்ணாமலை கோயிலுக்கு 100 ஏக்கர் நிலத்தை தர்மகர்த்தா தனக்கோட்டி முதலியார் தானமாக தந்தார்.

* முன்பு காடாக இருந்த திருவண்ணாமலையில் வனவிலங்குகள் வாழ்ந்தன.

* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முன்பாக முதல்நாள் துர்கை, இரண்டாம் நாள் பிடாரியம்மன், மூன்றாம் நாள் விநாயகர் வழிபாடு நடக்கிறது.

* திருவண்ணாமலை கோயிலுக்கு இரண்டு தலபுராணங்கள் உண்டு. 1. அருணகிரி புராணத்தை எழுதியவர் கண்கட்டி மறைஞானசம்பந்தர்.

2. அருணாசல புராணத்தை எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர்.

* விசிறி சாமியார் என்னும் யோகி ராம்சுரத்குமார், இந்த ஊரில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முகப்பில் தங்கியிருந்தார்.

* சம்பந்த விநாயகர் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்தில், மன்னர்கள் முடிசூடுவது வழக்கம். அண்ணாமலையார் சன்னதியில் முடிசூட்டும் வழக்கமில்லை.

* புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டாலஜி என்ற நிறுவனம், திருவண்ணாமலை கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us