sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 19, 2025 02:54 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 02:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கு.தீபா, அருப்புக்கோட்டை, விருதுநகர்: விளக்கேற்றும் போது எண்ணெய்யா... திரியா... எது முதலில்?

விளக்கை சுத்தம் செய்த பின் எண்ணெய்யை ஊற்றுங்கள். அதில் திரியை நனைத்து விளக்கேற்றுங்கள்.



தா.அனுஷியா, நாகர்கோவில், கன்னியாகுமரி: அபிஜித் முகூர்த்தம் என்றால்...

காலை 11:50 - 12:10 மணி வரை. இந்த நேரத்தில் எதை தொடங்கினாலும் வெற்றி.



வெ.ராஜா, கல்யாண்புரி, டில்லி: சிறிய கோயிலில் சங்காபிஷேகம் நடத்தலாமா?

எந்த கோயிலிலும் நடத்தலாம்.

தி.செல்வி, நங்கநல்லுார், சென்னை: *மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்றால்...

பெற்றோரே தெய்வம் என்பது இதன் பொருள்.

சொ.சிவா, வீரவநல்லுார், திருநெல்வேலி: கடலில் நீராடுவோர் பழைய துணிகளை விடுவது சரியா?

சரியல்ல. இதனால் கடலை நாம் அசுத்தப்படுத்துகிறோம்.

ரா.திவ்யபாரதி, சின்னாளபட்டி, திண்டுக்கல்: ஆன்மிக வளர்ச்சிக்கு...

தனிமனித ஒழுக்கமும், பக்தியும் சேர்ந்தால் ஆன்மிக வளர்ச்சி ஏற்படும்.

ம.சீதளாதேவி, ஊட்டி, நீலகிரி: குருட்டு அதிர்ஷ்டம் என்றால்...

தகுதியற்ற ஒருவருக்கு பணம், பதவி, புகழ் கிடைப்பது.

பா.ஸ்ரீநிதி, மதுரமங்கலம், காஞ்சிபுரம்: விநாயகர் இல்லாத அரசமரத்தை வழிபடலாமா...

தெய்வீக சக்தி நிறைந்தது அரசமரம். அதனால் தனியாகவும் வழிபடலாம்.

கு.கல்யாண், திருநாவலுார், கள்ளக்குறிச்சி: சுக்கிர தோஷம் விலக...

கோசாலையில் உள்ள பசுக்களுக்கு வெள்ளியன்று அகத்திக்கீரை கொடுத்து மூன்று முறை சுற்றுங்கள்.






      Dinamalar
      Follow us