sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : டிச 04, 2025 01:38 PM

Google News

ADDED : டிச 04, 2025 01:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீ.கனகவள்ளி, குரோம்பேட்டை, சென்னை: வீண்பழியில் இருந்து தப்பிக்க...

ஞாயிறன்று ராகு காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) சரபேஸ்வரரை வழிபடுங்கள்.

ரா.ரெங்கசாமி, வடுகபட்டி, தேனி: துவார பாலகர் என்பவர்கள்...

கருவறையின் முன் உள்ள இவர்கள் பெயர் சண்டன், பிரசண்டன். 'தெய்வம் தான் எல்லாம்' என நமக்கு காட்டுகின்றனர்.

ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம், திருவள்ளூர்: நவதானியத்தை நைவேத்யம் செய்யலாமா?

செய்யலாம். இது நவக்கிரகத்திற்கு உரியது.

மு.உஷா, திருநகர், மதுரை: கைக்குழந்தைக்கு திருஷ்டி சுற்றுவது கட்டாயமா...

ஆம். வாரம் ஒருமுறை மிளகாய், உப்பு வைத்து சுற்றுங்கள்.

பி.முனியசாமி, கல்யாண்புரி, டில்லி: ஆன்மிக சங்கங்களில் ஆண்டு விழா அவசியமா...

அவசியம் தான். தங்களின் தர்மச் செயலை மற்றவருக்கு இதன் மூலம் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எம்.கருப்பசாமி, வீரவநல்லுார், திருநெல்வேலி: கையில் கயிறு கட்டுவது ஏன்?

உடல் நலத்துடன் வாழ, திருஷ்டியை போக்க கயிறு கட்டுகிறோம்.



ம.தேவகி, நேதாஜிபுரம், கோயம்புத்துார்: ஆண்டாள் பாடிய திருப்பாவை பற்றி...

மார்கழி மாத அதிகாலையில் இதை பாடினால் திருமணம் நடக்கும்.

சாய்.தன்யா, காமராஜ் நகர், கடலுார்: திருவெம்பாவை உற்ஸவம் என்றால்...

மார்கழியில் நடராஜருக்கு நடக்கும் பத்து நாள் விழா இது.

பி.முருகன், மார்த்தாண்டம், கன்னியாகுமரி: பகவத் கீதை சொல்லும் தத்துவம்...

கடமையைச் செய்; கடவுள் அருளால் பலன் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us