
கே.ஆர்.பிருந்தா, பிராட்வே, சென்னை.
*தீபாவளிக்கும் திருக்கார்த்திகைக்கும் என்ன தொடர்பு?
இரண்டுமே தீபத்தை போற்றும் விழாக்கள். தீபாவளி முதல் திருக்கார்த்திகை வரை தினமும் விளக்கேற்றி குபேர லட்சுமியை வழிபடுவது நல்லது.
சி.ஆர்த்தி, கும்முடிப்பூண்டி, திருவள்ளூர்.
*முதன் முதலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றியது யார்? ஏன்?
முதன்முதலில் ஏற்றியவள் பார்வதி. தன் கணவர் சிவனின் உடலின் இடது பாகத்தை பெற்றதற்காக திருக்கார்த்திகையன்று தீபமேற்றினாள்.
வி.சந்தோஷ், தொட்டபள்ளாபுரா, பெங்களூரு.
*திருவண்ணாமலையின் சமீபகால ஞானிகள் யார்?
ரமணர், யோகிராம் சுரத்குமார் ஆகியோர்.
கே.புனிதவதி, நிலக்கோட்டை, திண்டுக்கல்.
*தீபமங்கள ஜோதி நமோநம என பாடியவர் யார்?
பழநி திருப்புகழில் அருணகிரிநாதர் இப்படி முருகனைப் பாடியுள்ளார்.
ஆர்.ராஜாமணி, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.
*திருக்கார்த்திகையன்று அண்ணாமலையாரை வழிபடுவது ஏன்?
தன் கணவர் சிவனின் உடலின் இடது பாகத்தை பார்வதி பெற்றதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் ஜோதிவடிவில் சிவனை தரிசித்ததும் திருக்கார்த்திகையன்று தான். இதனால் அண்ணாமலையாரை வழிபடுகிறோம்.
கே.பிரவின், ரஜோரி கார்டன், டில்லி.
*கோயில்களில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?
சொக்கப்பனை என்றால் 'சொக்க வைக்கும் அழகு'. ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சியளித்ததை கொண்டாடும் விதமாக பனை மட்டை, தென்னங்கீற்றுகளை குவித்து வைத்து கொளுத்துகிறோம்.
ஜி.மீனா, விளாத்திகுளம், துாத்துக்குடி.
*பூஜையின் போது சொல்ல முருகன் ஸ்லோகம் சொல்லுங்கள்.
கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லுங்கள்.
“உமா கோமள ஹஸ்தாப்யாம்
ஸம்பாவித லலாடகம்
ஹிரண்ய குண்டலம் வந்தே
குமாரம் புஷ்கரஸ்ரஜம்”
ஆர்.கோகிலா, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.
*திருக்கார்த்திகை தீபம் உணர்த்தும் தத்துவம் என்ன?
ஒரு தீபத்தில் இருந்து பல தீபங்களை ஏற்றினாலும் ஒளி குறையாது. அது போல உயிர்களுக்கு எல்லாம் அருளை வழங்கினாலும் கடவுள் எப்போதும் முழுமையாக இருப்பவர் என்பதை தீபம் உணர்த்துகிறது.
எல்.சிவனேசன், காட்டுமன்னார்கோவில், கடலுார்.
*செம்பொருள் என்னும் சொல் முருகனைக் குறிக்குமா?
முருகு என்பதற்கு அழகு, இளமை, செம்மை எனப் பொருள். இதனால் இச்சொல் முருகனைக் குறிக்கும்.
எல்.மீனாட்சி, உச்சிப்புளி, ராமநாதபுரம்.
*இல்லக விளக்கு என்றால் என்ன.
ஓம் நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரமே.