sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜன 05, 2024 10:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 10:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.ராஜேஷ், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி.

*பொய் பேசாமல் இருக்க என்ன செய்யலாம்?

பொய் பேசுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானது. இதை உணர்ந்தால் போதும்.

வி.அருண், தாம்பரம், செங்கல்பட்டு.

*பசித்திரு விழித்திரு தனித்திரு - பொருள் என்ன?

வயிறு புடைக்க சாப்பிட்டால் அறிவு மங்கும். எனவே அளவாக சாப்பிட்டு பசியுடன் இரு.

* ஏழு மணிநேரத்திற்கு மேல் துாங்காமல் விழிப்புடன் செயல்படு.

* வீண் பேச்சை தவிர்த்து ஆன்மிகத்தில் ஈடுபடு.

எம்.சுவேதா, சுரண்டை, திருநெல்வேலி.

*அரைஞாண் கயிறாக பாம்பை விநாயகர் வைத்திருப்பது ஏன்?

விஷத்தை (தீமையை) புறக்கணித்து அமுதத்தை (நன்மையை) அளித்துக் காப்பவர் விநாயகர். இதை உணர்த்த பாம்பை ஆபரணமாக வைத்துள்ளார்.

கே.பாஸ்கரன், கரோல்பாக், டில்லி.

*மூன்று தலைமுறையினர் வாழ்ந்த வீட்டில் இருக்கலாமா?

பல தலைமுறையினர் வாழ்ந்த வீட்டில் இருப்பது நீங்கள் செய்த புண்ணியம்.

ஆர்.ராஜி, கன்னிவாடி, திண்டுக்கல்.

*அன்னதானம் அளித்த பின்பே சாப்பிட வேண்டும் என்பது ஏன்?

பசித்தவருக்கு அன்னம் அளித்தபின் சாப்பிடுவது மேலான தர்மம். இதை யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி' என்கிறார் நாயன்மாரான திருமூலர்.

வி.பிரபு, ஹலசூரு, பெங்களூரு.

*கோடை காலத்தில் குலதெய்வத்திற்கு விழா நடத்துவது ஏன்?

கோடைகாலத்தில் விவசாயப்பணி குறைவாக இருக்கும். இதனால்தான் அச்சமயத்தில் குலதெய்வத்திற்கு விழா கொண்டாடுகிறோம்.

ஆர்.ராஜேஷ், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

*மேற்கு நோக்கிய சிவனை வழிபட்டால்...

மேற்கு நோக்கிய சிவனை வழிபடுவது விசேஷம். விஷ ஜுரம், தீராத நோய், கடன்கள் மறையும்.

பி.கேதார்நாத், அவிநாசி, திருப்பூர்.

*தன்னைத் தானே பலியிடும் சிற்பம் தேர்முட்டியில் இருப்பது ஏன்?

தேரோட்ட விழாவில் விபத்து நேராமல் இருக்க இச்சிற்பத்தை செதுக்கி உள்ளனர்.

எம்.கமலம், கொட்டாம்பட்டி, மதுரை.

*கையில் ஆறு விரல் இருக்கலாமா?

இது இயல்பானதுதான். ஆறு விரல் இருப்பதை யோகம், அதிர்ஷ்டம் என்பர்.

கே.ராதா, கருங்கல், கன்னியாகுமரி.

*எங்கள் வீட்டில் நிறைய பல்லி ஊர்கிறதே...

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள பல்லி சன்னதியில் பிரார்த்தனை செய்யுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us