sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 14, 2023 12:26 PM

Google News

ADDED : மார் 14, 2023 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.நேரு, வெண்கரும்பூர், கடலுார்.

*வருமானம் இருந்தும் முன்னேறவில்லையே...

இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சி. முன்னேற்றமும் அதுவே.

எம்.ஆனந்தி, காயல்பட்டினம், துாத்துக்குடி.

*குழந்தைகளிடம் படிக்கும் பழக்கம் குறைகிறதே...

அலைபேசி, இணையதள பயன்பாட்டை குறைத்தால் மட்டுமே படிக்க நேரம் கிடைக்கும். இதற்கு பெற்றோர், ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.

கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதுார், கன்னியாகுமரி.

*கார்த்தவீரியன், வீரபத்திரர் இருவரும் ஒருவரா?

சிவனிடம் தோன்றிய இவர்கள் வெவ்வேறானவர்கள். மனிதனாக வாழ்ந்து தீயசக்திகளை அழித்தவர் கார்த்தவீரியன். தெய்வமாக இருந்து தீயசக்திகளை அழிப்பவர் வீரபத்திரர்.

எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவைப்புதுார், கோயம்புத்துார்.

*அம்மனுக்கு கண்மலர் செலுத்துவது ஏன்?

கண்நோய் தீர்வதற்காக கண்மலரை காணிக்கை செலுத்துகிறோம். அப்போது மாவிளக்கை ஏற்றுங்கள்.

எம்.கமலேஷ், சோழிங்கநல்லுார், சென்னை.

*குரங்கு, நாய் அடிக்கடி என்னை துரத்துகின்றன. என்ன செய்யலாம்?

இது விலங்குகளின் இயல்பு. அவற்றை விட்டு விலகுங்கள்.

கே.ஜனா, புதுடில்லி.

*மிளகு சாதத்தை அன்னதானம் செய்யலாமா?

செய்யலாம். அர்த்தஜாம பூஜையின் போது கோயிலில் நைவேத்யமாக மிளகு சாதம் படைப்பர். அதற்கு பொருளுதவி செய்யுங்கள்.

ஆர்.அருணா, திருப்பரங்குன்றம், மதுரை.

*பாடல்கள் பாடும் முன் தெய்வத்திடம் உத்தரவு கேட்கணுமா?

தேவையில்லை. பக்தியுடன் பாடினால் போதும்.

பி.ஜெயா, மைசூரு.

*யந்திரத்தில் மந்திரங்களை உருவேற்றுவது எப்படி?

மந்திரத்தை உச்சாடனம் (தொடர்ந்து ஜபிப்பது) செய்தால் யந்திரத்தில் ஏறும். இதனை 'உருவேறத் திருவேறும்' என்பர்.

க.வள்ளி, ஆண்டிபட்டி, தேனி.

*அம்மன் தனித்து அருள்புரியும் தலங்களைச் சொல்லுங்கள்?

சமயபுரம், புன்னைநல்லுார், பண்ணாரி மாரியம்மன், மேல்மலையனுார் அங்காளம்மன், ஆனைமலை மாசாணியம்மன் என எத்தனையோ தலங்கள் உள்ளன.

என்.சம்பத், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

*இறப்புத் தீட்டின் போது சந்தியாவந்தனம் செய்யலாமா?

தீட்டு காலத்தில் அர்க்கியம் இன்றியும், வியாஹிருதி நீக்கி மந்திரம் ஜபித்தும் சந்தியாவந்தனம் செய்யலாம். இதற்கான விளக்கத்தை புரோஹிதர்களிடம் கேளுங்கள்.






      Dinamalar
      Follow us