sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 26, 2023 10:56 AM

Google News

ADDED : மே 26, 2023 10:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.ராமராஜன், வள்ளியூர், திருநெல்வேலி.

*அன்னதானம் செய்தால் பாவம் தீருமா?

நிச்சயமாக தீரும். ஆனால் அறிந்தே பாவம் செய்தவருக்கு பலனளிக்காது.

எஸ்.மணிகண்டன், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.

*சீறி வந்த நல்ல பாம்பை அடித்த போது தப்பித்து விட்டது. பரிகாரம் என்ன?

செவ்வாயன்று ராகுகாலத்தில் (மதியம் 3:00 - 4:30 மணி) முருகனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

கே.சந்திரா, வில்லிவாக்கம், சென்னை.

*அங்கப்பிரதட்சணம் செய்வது ஏன்?

உலகமே கைவிட்ட நிலையிலும் மனம் தளராமல் 'நல்லதே நடக்கும்' என்ற நம்பிக்கையுடன் கடவுளைச் சரணடைந்து முறையிடுவது அங்கப்பிரதட்சணம்.

ஆர்.கேசவன், ராஜபாளையம், விருதுநகர்.

*கடவுள் வழிபாட்டில் மிருகங்களை பலியிடலாமா?

பலியிடக் கூடாது. 'அன்பே சிவம்' என்கிறார் திருமூலர். நாமும் அதைப் பின்பற்றி வழிபடுவது நல்லதே.

எல்.கிருஷ்ணவேணி, புவனகிரி, கடலுார்.

*ஸ்ரீராமரை இளைஞராகவும், கிருஷ்ணரை குழந்தையாகவும் வழிபடுவது ஏன்?

ராமர் இளைஞராக இருந்த போது ராவணனை அழித்தார். கிருஷ்ணர் குழந்தையாக இருந்த போது பூதனை, காளிங்கன் என்ற அசுரர்களை அழித்தார். இதை போற்றும் விதமாக நாமும் வழிபடுகிறோம்.

எம்.பரமேஸ்வரன், ஜனக்புரி, டில்லி.

*கோயிலில் பூப்போட்டு பார்த்து திருமணம் நடத்தலாமா?

பெரியவர்கள் சம்மதத்துடன், மணமக்கள் ஒருவரை ஒருவர் ஏற்க முன்வந்தால் மட்டுமே பூப்போட்டு பார்த்து திருமணம் நடத்தலாம்.

டி.வைசாலி, சென்னபட்னா, பெங்களூரு.

*பூஜையின் போது நேரும் தவறுகளை சரிசெய்ய என்ன செய்யலாம்?

பூஜை முடிந்ததும் மூன்று முறை சுவாமியை வலம் வந்து, ஐந்து முறை விழுந்து நமஸ்காரம் செய்யுங்கள்.

வி.மகாலிங்கம், மறைமலைநகர், காஞ்சிபுரம்.

*வாழ்வில் இகபர சுகம் பெற வழியுண்டா?

இகம் என்றால் மண்ணுலக வாழ்க்கை. பரம் என்றால் விண்ணுலக வாழ்க்கை. இரண்டிலும் துன்பம் இன்றி வாழ்வதே இகபர சுகம். கடவுளின் திருவடியைச் சரணடைந்தால் அந்நிலை கிடைக்கும்.

கே.விக்னேஷ், வில்லுக்குறி, கன்னியாகுமரி.

*சடாரியை தலையில் வைப்பது ஏன்?

பெருமாளின் திருவடியைத் தாங்கி நிற்பது சடாரி. இதை தலையில் தாங்கினால் காமம், குரோதம், பேராசை, மயக்கம், ஆணவம், பொறாமை எனும் ஆறு தீயகுணங்கள் நீங்கும்.

எம்.நிவேதா, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.

*இறந்த நபர் மீண்டும் இறப்பது போல கனவு வந்தால்...

நடந்ததை அடிக்கடி சிந்திப்பதால் மனதில் ஏற்பட்ட தாக்கமே கனவாக வருகிறது. இதை பொருட்படுத்தாதீர்.






      Dinamalar
      Follow us