sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஆக 21, 2023 01:47 PM

Google News

ADDED : ஆக 21, 2023 01:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.வித்யா, சக்குர்பூர், டில்லி.

*காக்காவுக்கு சோறிடுவதால் பலனுண்டா...

சனீஸ்வரர் வாகனமாகவும், முன்னோர் வடிவமாகவும் இருப்பது காக்கை. இதற்கு சோறிட்டால் சனீஸ்வரர் அருளும், முன்னோர் ஆசியும் கிடைக்கும்.

கே.கவிதா, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்.

*கன்யாதானம், அன்னதானம் சிறந்தது எது?

இவற்றை விட கல்வி தானம் சிறந்தது.

'அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.

வி.மனோன்மணி, துடியலுார், கோயம்புத்துார்.

*ஆடிமாதம் அம்மனுக்கு உகந்தது ஏன்?

ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாதம் தட்சிணாயன புண்ணிய காலம். அம்மனுக்குரிய ஆடிப்பூரம், நவராத்திரி, பாவை நோன்பு இதில் இடம்பெறுகின்றன. ஆடியில் தான் அம்மன் அவதரித்தாள்,

ஆர்.ஆர்த்தி, திசையன்விளை, திருநெல்வேலி.

*புனித நதியில் நீராடும்போது சொல்லும் மந்திரம் எது?

கங்கே ச யமுனே சைவ

கோதாவரி ஸரஸ்வதி !

நர்மதா ஸிந்து காவேரி

ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு !!

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை மனதால் நினைத்து நீராடுகிறேன். இவை என்னை புனிதமாக்கட்டும்.

எம்.சந்தான கிருஷ்ணன், மதுராந்தகம், செங்கல்பட்டு.

*சிலர் ரகசியத்தைக் காப்பாற்றுவதில்லையே...

இயல்பான பேச்சு, வெளிப்படையான குணம் கொண்டவர்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியாது.

கே.முருகன், தேவனஹள்ளி, பெங்களூரு.

*கடவுள் மீது செய்த சத்தியத்தை மீறினால்…

சத்தியத்தை மீறினால் அதற்கான தண்டனை உண்டு. ஆனால் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் கடவுளின் கருணை கிடைக்கும்.

பி.ரவி, பழநி, திண்டுக்கல்.

*வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடம் ஏன்?

தெய்வீகமானதும், சிவனைப் போல் மூன்று கண்கள் கொண்டது தேங்காய். அதனால் அதற்கு முதலிடம் தருகிறோம்.

எம்.நிரஞ்சன், அலங்காநல்லுார், மதுரை.

*சாஸ்திரத்தை மீறினால்...

சாஸ்திரத்தை மீறினால் தீங்கு உண்டாகும். இதனால் வருங்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவர்.

ஜி.மாரியப்பன், பெண்ணாடம், கடலுார்.

*காற்றை மட்டுமே சுவாசித்து வாழ முடியுமா?

நம்மால் அப்படி வாழ முடியாது. சித்தர்களால் மட்டுமே முடியும்.

ஆர்.கமலா, பள்ளியாடி, கன்னியாகுமரி.

*மந்திரங்களை தவறாக உச்சரித்தால்...

மந்திரங்களுக்கு உச்சரிப்பு முக்கியம். தவறினால் பலன் கிடைக்காது. முறையான பயிற்சி பெறுங்கள்.






      Dinamalar
      Follow us