
ஆர்.வித்யா, சக்குர்பூர், டில்லி.
*காக்காவுக்கு சோறிடுவதால் பலனுண்டா...
சனீஸ்வரர் வாகனமாகவும், முன்னோர் வடிவமாகவும் இருப்பது காக்கை. இதற்கு சோறிட்டால் சனீஸ்வரர் அருளும், முன்னோர் ஆசியும் கிடைக்கும்.
கே.கவிதா, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்.
*கன்யாதானம், அன்னதானம் சிறந்தது எது?
இவற்றை விட கல்வி தானம் சிறந்தது.
'அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.
வி.மனோன்மணி, துடியலுார், கோயம்புத்துார்.
*ஆடிமாதம் அம்மனுக்கு உகந்தது ஏன்?
ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாதம் தட்சிணாயன புண்ணிய காலம். அம்மனுக்குரிய ஆடிப்பூரம், நவராத்திரி, பாவை நோன்பு இதில் இடம்பெறுகின்றன. ஆடியில் தான் அம்மன் அவதரித்தாள்,
ஆர்.ஆர்த்தி, திசையன்விளை, திருநெல்வேலி.
*புனித நதியில் நீராடும்போது சொல்லும் மந்திரம் எது?
கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி !
நர்மதா ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு !!
கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை மனதால் நினைத்து நீராடுகிறேன். இவை என்னை புனிதமாக்கட்டும்.
எம்.சந்தான கிருஷ்ணன், மதுராந்தகம், செங்கல்பட்டு.
*சிலர் ரகசியத்தைக் காப்பாற்றுவதில்லையே...
இயல்பான பேச்சு, வெளிப்படையான குணம் கொண்டவர்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியாது.
கே.முருகன், தேவனஹள்ளி, பெங்களூரு.
*கடவுள் மீது செய்த சத்தியத்தை மீறினால்…
சத்தியத்தை மீறினால் அதற்கான தண்டனை உண்டு. ஆனால் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் கடவுளின் கருணை கிடைக்கும்.
பி.ரவி, பழநி, திண்டுக்கல்.
*வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடம் ஏன்?
தெய்வீகமானதும், சிவனைப் போல் மூன்று கண்கள் கொண்டது தேங்காய். அதனால் அதற்கு முதலிடம் தருகிறோம்.
எம்.நிரஞ்சன், அலங்காநல்லுார், மதுரை.
*சாஸ்திரத்தை மீறினால்...
சாஸ்திரத்தை மீறினால் தீங்கு உண்டாகும். இதனால் வருங்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவர்.
ஜி.மாரியப்பன், பெண்ணாடம், கடலுார்.
*காற்றை மட்டுமே சுவாசித்து வாழ முடியுமா?
நம்மால் அப்படி வாழ முடியாது. சித்தர்களால் மட்டுமே முடியும்.
ஆர்.கமலா, பள்ளியாடி, கன்னியாகுமரி.
*மந்திரங்களை தவறாக உச்சரித்தால்...
மந்திரங்களுக்கு உச்சரிப்பு முக்கியம். தவறினால் பலன் கிடைக்காது. முறையான பயிற்சி பெறுங்கள்.

