
சி.நிஜந்தன், பிராட்வே, சென்னை.
*பசுவுக்கு கீரை கொடுத்தால்...
முன்வினை பாவம் போவதோடு சத்தான பாலும் கிடைக்கும். இதை 'யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை' என்கிறது திருமந்திரம்.
வி.வேல்முருகன், ஸ்ரீவைகுண்டம், துாத்துக்குடி.
*பூர்ண கும்ப மரியாதை என்கிறார்களே...
துறவி, சான்றோருக்கு வழங்கும் கவுரவம் இது. பூரணம் என்றால் 'முழுமை'. நிறைகுடத்தை ஏந்தி மங்களகரமாக வரவேற்பதே இதன் நோக்கம்.
பி.விஜய்சாரதி, ஹலசூரு, பெங்களூரு.
*அதிகாலையில் நல்ல கனவு வந்தால் அதன் பின் துாங்கக் கூடாதாமே...
துாங்கக் கூடாது. நீங்கள் கண்ட கனவு பலிக்க அதற்கான முயற்சி அவசியம். கடவுளின் அருள் இருந்தால் வெற்றி நிச்சயம்.
ஆர்.சுஜாதா, சிங்கம்புணரி, சிவகங்கை.
*சுதர்சன ஹோமம் என்பது என்ன?
மகாவிஷ்ணுவின் ஆயுதமான சுதர்சனத்தை பூஜிப்பது சுதர்சன ஹோமம். நோய், வழக்கு, பயம், திருஷ்டி போக்க இதை நடத்துவர்.
ஆர்.மேனகா, துவாரகா, டில்லி.
*செடியிலிருந்து உதிர்ந்த மலர்களை பூஜைக்குப் பயன்படுத்தலாமா?
செடியில் இருந்து பறிப்பது நல்லது. பவளமல்லி மலர் மட்டும் விதிவிலக்கு.
கே.பாரதி கண்ணன், திங்கள்நகர், கன்னியாகுமரி.
*நலமுடன் வாழ தினமும் என்ன செய்யலாம்?
அவரவர் வழக்கப்படி நெற்றியில் திருநீறு, குங்குமம், திருமண் இட்டு கோயிலுக்குச் செல்லுங்கள். மனநலம், உடல்நலம், நீண்ட ஆயுளை பெறுவீர்கள்.
எம்.இந்துமதி, பெதப்பம்பட்டி, திருப்பூர்.
*படுக்கையறையில் சுவாமி படங்கள் இருக்கலாமா?
சுவாமி படங்கள் இருக்கக் கூடாது.
எம்.சந்தோஷ், நத்தம், திண்டுக்கல்.
*அர்ச்சகரிடம் விபூதி வாங்கலாமா அல்லது பூசச் சொல்லலாமா?
அர்ச்சகரிடம் விபூதி வாங்குவது நல்லது.
கே.வத்சலா, பெண்ணாடம், கடலுார்.
*சமையல் தொடங்கும் முன் நீராடுவது அவசியமா...
அன்னபூரணியின் இருப்பிடம் சமையலறை. நீராடிய பின் அன்னபூரணியை வணங்கிய பின் சமையுங்கள்.
எஸ்.கவிதா, ஆலந்துார், செங்கல்பட்டு.
*மோட்சதீப வழிபாடு நடத்துவது ஏன்?
இறந்தவரின் ஆன்மா கடவுளின் பாதத்தைச் சேர முப்பதாவது நாளில் மோட்ச தீபம் ஏற்றுகிறோம்.