
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக் கிடமாகாதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத்தானை
நினையுமா வல்லீராகில் உய்யலாம் நெஞ்சினீரே.
பொருள் : நல்ல மனம் படைத்த சிவனே! தாய், தந்தை, மனைவி, மக்கள், உறவினர் என்று உறவுகளுடன் வசிக்கிறேன். இதனால், தீவினைகளில் அழுந்தி மனதில் வேதனை உண்டாகிறது. ஆரவாரம் செய்யும் கடல் சூழ்ந்த தலமான நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரரே! உம்மை மனதார வழிபட்டவருக்கு சம்சார துன்பத்தைப் போக்கி பிறவிப்பயன் அருள்வீராக.