
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கையால் உனைத் தொழச் சென்னியினால் உன் கழல் வணங்க
மெய்யா அடிக்கடி வாக்கால் துதிக்க விதித்து மனம்
நையா இயற்கை நல்கி இனி என்னை நழுவ விடேல்
ஐயா உனக்கு அபயம் பழனாபுரி ஆண்டவனே
பொருள்: பழநி முருகனை கை குவித்து வணங்குகிறேன். தலையால் உன் திருவடிகளைச் சரணடைகிறேன். உன் திருப்பெயரை இடைவிடாது ஜபிக்கிறேன். என் மனம் குளிரும் வகையில் நல்ல நிலையை வழங்க வேண்டுகிறேன். பழநியில் இருக்கும் முருகனே! உன்னிடம் அடைக்கலம் அடைந்த என்னை கைவிடாமல் காப்பாயாக.