அர்ச்சனைப் பூக்கள்
இந்த வார ஸ்லோகம்
ப்ரம்மா ச விஷ்ணுஸ்ச்ச ஸ்ரீஸ்ச்ச வாணீ
கௌரீ ச லக்ஷ்மீஸ்ச விநாயகஸ்ச்ச
ஸ்கந்தஸ்ச்ச தேவா: ரிஷியஸ்ச்ச ஸர்வே
குர்வந்து ஸர்வே மம மங்களானி
பொருள்: பிரம்மாவும், விஷ்ணுவும், சிவனும், சரஸ்வதியும், பார்வதியும், லட்சுமியும், விநாயகரும், முருகப்பெருமானும், எல்லா தேவர்களும், மகரிஷிகளும் எனக்கு சுபமங்களத்தை அருள்செய்யட்டும்.
மனபபாடப்பகுதி
உனக்குப் பணிசெய்ய உன்றனை எந்நாளும்
நினைக்க வரம் எனக்கு நீ தா- மனக்கவலை
நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும்
ஆக்குகின்ற சொக்கநா தா.
பொருள்: மனக்கவலையைப் போக்குகின்ற தென்
மதுரையாகிய ஆலவாய்நகரில் வீற்றிருக்கும் சிவனே! அனைத்து உலகங்களையும் படைத்த சொக்கநாதனே! உனக்கு பணிசெய்யவும், உன் திருவடியை எந்நாளும் மறவாமல் இருக்கவும் எனக்கு வரம் அருள்வாயாக.
குறிப்பு: இந்தப் பாடலைக் குருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.