ADDED : நவ 05, 2010 04:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிமலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது பெற்றவர்களுக்கு பெருமையாக இருக்கும். அந்த வகையில் தன் பிள்ளையிடமே 'ஓம்' என்னும் மந்திரத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்தார் ஈசன். அதுவும் மகன் குருநாதராக வீற்றிருக்க, சிவன் ஒரு சீடனைப் போல் மண்டியிட்டு கேட்டார். அன்று முதல் முருகன் 'அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா' என்று போற்றப்பட்டார். சிவகுருநாதனான சுவாமிநாதப்பெருமானை குருவிற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபட்டால், ஞானமுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பது ஐதீகம்.