
* கடவுளிடம் சரணடைந்தால் உனது பாவம் தீரும்.
* மற்றவர்களை அவமதிப்பது கொடிய செயலாகும்.
* அற்ப விஷயங்களில் ஆசை கொள்ளக்கூடாது.
* ஒருவர் படித்தவராக இருந்தாலும் அவர், 'அடியேன்' என்று தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* மனதில் இருந்து 'தான்' என்ற அகந்தையை அகற்று.
* பலன் கருதாமல் பிறருக்கு உதவி செய். அது புண்ணியமாகும்.
* கடவுளுக்கு செய்யும் தொண்டும், குருநாதருக்குச் செய்யும் சேவையும் ஒன்றே.
* கடவுளின் திருவுள்ளம் மகிழ்ச்சி ஏற்படும்படியாக பணி செய்.
* பிறப்பால் யாரையும் ஏளனம் செய்யாதே.
* நீ கற்றுக்கொண்டதை பிறருக்கும் கற்றுக்கொடு.
* மற்றவர்களை பற்றி குறை சொல்பவனிடம் பேசாதே.
* முந்தைய பிறவிகளில் நீ செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே துன்பம் வருகிறது.
* பெருமாள் திருவடிகளை கெட்டியாக பிடித்துக்கொள். உனது பாவம் தீரும்.
* பலனை எதிர்பார்த்து பணிகளை செய்யாதே.
* பிறர் வாழ்வில் முன்னேற உதவியாக இரு.
சொல்கிறார் ராமானுஜர்

