
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்
பார்த நைவேஹ நாமுத்ர
விநாஸஸ்தஸ்ய வித்யதே!
நஹி கல்யாண க்ருத்ஸ்சித்
துர்கதிம் தாத கச்சதி!!
ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாந்
உஷித்வா ஸாஸ்வதீ: ஸமா:!
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே
யோக ப்ரஷ்டோபி ஜாயதே!!
பொருள்: அர்ஜுனா! பக்தனுக்கு அழிவே இல்லை. ஏனெனில் அவர்கள் தாழ்ந்த நிலையை அடைய மாட்டார்கள். சொர்க்கத்தில் சில காலம் தங்கியிருந்து, பின் ஒழுக்கம் மிக்க செல்வந்தர் குடும்பத்தில் பிறப்பர்.