sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பணிவுக்கு கிடைத்த பரிசு!

/

பணிவுக்கு கிடைத்த பரிசு!

பணிவுக்கு கிடைத்த பரிசு!

பணிவுக்கு கிடைத்த பரிசு!


ADDED : ஆக 19, 2016 02:25 PM

Google News

ADDED : ஆக 19, 2016 02:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தையான நந்தகோபர், ஒருநாள் காலை 4.30 மணி வாக்கில் யமுனையாற்றில் நீராடச் சென்றார். பொழுது புலரும் முன்பே நீராட வந்த நந்தகோபரை கண்டிக்கும் விதத்தில், தண்ணீருக்கு அதிபதியான வருணனின் தூதன் ஒருவன், அவரை வருண லோகத்திற்கு இழுத்துச் சென்றான். வெகுநேரமாகியும் நந்தகோபர் வீடு திரும்பாததால் யசோதை கவலைப்பட்டாள்.

விஷயம் அறிந்த கிருஷ்ணர் தன் யோகசக்தி மூலம் நடந்ததை அறிந்தார். “அம்மா! வருந்தாதீர்கள். இதோ நொடியில் தந்தையை அழைத்து வருகிறேன்” என்று உறுதியளித்து புறப்பட்டார். பெருகியோடும் யமுனைக்குள் பாய்ந்த கிருஷ்ணர் வருண மாளிகை நோக்கிச் சென்றார். கிருஷ்ணர் தன் மாளிகைக்கு வந்தது கண்ட வருணன் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டான்.

“பகவானே! தங்களின் பாதத்தில் சரணடைந்தவர்கள் அனைவரும் பிறவிக்கடலில் இருந்தே விடுதலை பெறுகின்றனர். இன்று உங்களைத் தரிசிக்கும் பேறு வாய்க்கப் பெற்றேன். தங்களின் தந்தையார் என்பதை அறியாமல் தவறு இழைத்த என் தூதரை மன்னித்து அருளுங்கள்” என்று வேண்டினான்.

வருணனின் பணிவு கண்ட கிருஷ்ணருக்கு தண்டிக்கும் எண்ணம் மறைந்தது. அவனுக்கு ஆசியளித்து தந்தையுடன் கிளம்பினார்.






      Dinamalar
      Follow us