sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

உருவத்தை காட்டிடும் கண்ணாடி! உலகத்தை வைத்திடும் முன்னாடி!

/

உருவத்தை காட்டிடும் கண்ணாடி! உலகத்தை வைத்திடும் முன்னாடி!

உருவத்தை காட்டிடும் கண்ணாடி! உலகத்தை வைத்திடும் முன்னாடி!

உருவத்தை காட்டிடும் கண்ணாடி! உலகத்தை வைத்திடும் முன்னாடி!


ADDED : ஜூலை 10, 2016 10:51 AM

Google News

ADDED : ஜூலை 10, 2016 10:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணக்காரர் ஒருவர் தன் குருவிடம், “என் மனம் குழப்பத்தில் இருக்கிறது. என் மனைவி, பிள்ளைகள், பணியாட்கள் யாரும் உண்மையாக இல்லை. எல்லாரும் சுயநலத்துடன் உள்ளனர்,” என்றார்.

புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்.

ஆயிரம் கண்ணாடி கொண்ட அறை ஒன்றில், ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.

'உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்!' என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை

சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.

அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. 'உலகிலேயே மோசமான இடம் இதுதான்!' எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்தக் கதையைச் சொன்ன குரு, “ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறையை இந்த சமூகத்துக்கு ஒப்பிடலாம். நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. எனவே உன் மனதை சரியாக வைத்திரு. நடப்பதெல்லாம் நல்லதாக தெரியும்,” என்றார்.

கி. புஷ்பலதா






      Dinamalar
      Follow us