sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கொடுப்பதில் மகிழ்ச்சி

/

கொடுப்பதில் மகிழ்ச்சி

கொடுப்பதில் மகிழ்ச்சி

கொடுப்பதில் மகிழ்ச்சி


ADDED : அக் 17, 2025 08:44 AM

Google News

ADDED : அக் 17, 2025 08:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணன் என்னும் இளைஞன் திருப்பதிக்குச் சென்றான். கூட்டம் அதிகமாக இருந்தது. தரிசனம் முடித்ததும் லட்டு வாங்க வரிசையில் நின்றான். பணக்காரர் ஒருவர் நான்கு லட்டுகளுடன் செல்வதைக் கண்டான். ஏழையான அவனால் ஒரு லட்டு தான் வாங்க முடிந்தது. வருந்திய அவன் வழியில் துறவி ஒருவரைக் கண்டான். ''சுவாமி! பணக்காரர்களால் நினைச்சதை எல்லாம் செய்ய முடிகிறது. ஏழையான எனக்கு இரண்டு லட்டு வாங்க முடியவில்லையே?'' எனக் கேட்டான்.

''மகனே! அவர் நாலு லட்டு வாங்கலாம். ஆனால் சர்க்கரை வியாதியுள்ள அவரால் சாப்பிட முடியுமா? உறவினருக்கு கொடுக்கவே வாங்கியுள்ளார். தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுப்பதே ஆன்மிகத்தின் அடிப்படை. அதுவே உண்மை மகிழ்ச்சி. இதில் இன்னொரு தத்துவமும் உள்ளது. அமிர்தம் போல இனிக்கும் லட்டை கொஞ்சம் தின்றதும் இன்னும் கிடைக்காதா என மனம் ஏங்கும். கடவுளின் கருணையும் அப்படியே. பெருமாளின் அருளுக்காக ஒவ்வொரு பக்தனும் ஏங்குகிறான். நீயும் பிறருக்கு பகிர்ந்து கொடு. கடவுளின் அருள் கிடைக்கும்'' என்றார்.






      Dinamalar
      Follow us