sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 11

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 11

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 11

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 11


ADDED : மே 01, 2025 01:53 PM

Google News

ADDED : மே 01, 2025 01:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்னங்களை நீக்கும் விக்னராஜ கணபதி

க்னம் என்றால் தடை; ஈஸ்வர என்றால் தலைவன். விக்னேச்வரன் என்பதால், விநாயகரே விக்னம் என்றால் தடை ஈஸ்வர தலைவன் விக்னேச்வரன் என்பதால், இந்தத் திருப்பெயர் சுட்டுகிறது. இவர் ஒரு திருமுகத்துடனும் பத்துத் திருக்கரங்களுடனும் திகழ்பவர். இவருக்கு புவனேச கணபதி என்றும் பெயருண்டு.

தியான சுலோகம்

சங்கேக்ஷு சாப குஸுமேஷு குடார பாச சக்ர ஸ்வதந்த ஸ்ருணி மஞ்ஜரிகா சராத்யை: |

பாணி ச்ரிதை: பரிஸமீஹித பூஷணஸ்ரீ: - விக்னேச்வரோ விஜயதே தபநீய கௌர: ||

சங்க² - சங்கு

இக்ஷு சாப - கரும்பு வில்

குஸும இஷு - (தாமரை, அசோகம், மா, மல்லிகை, நீலோத்பலம் ஆகிய ஐந்து மலர்களால் ஆன) மலர் அம்பு

குடார - மழு

பாச - பாசம்

சக்ர - சக்கரம்

ஸ்வதந்த - தனது ஒடிந்த தந்தம்

ஸ்ருணி - அங்குசம்

மஞ்ஜரிகா - தானியக் கொத்து

சராத்யை: - கூரிய அம்பு

பாணி ச்ரிதை: - (என்பவற்றை) கைகளில் ஏந்தி, அவற்றுடன்

பரிஸமீஹித - விரும்பி அணிந்திருப்பவையான

பூ'ஷணஸ்ரீ: - பல்வேறு ஆபரணங்களின் பொலிவோடு கூடியவரும்

தபநீய கௌர: - நண்பகல் சூரியனைப் போன்ற நிறமுள்ளவரும் ஆன

விக்னேச்வர: - தடைகளை நீக்குபவருமான கணபதியானவர்

விஜயதே - விளங்குகிறார். (வெல்க!)

சங்கு: விஷ்ணுவின் ஆயுதம். நாத தத்துவத்தைக் குறிக்கும்

கரும்பு வில், மலர்க்கணை: மன்மதனின் ஆயுதங்கள். உயிர்கள் வேண்டுபவற்றை அருள்பவர் கணபதி என்பதைக் காட்டுகின்றன.

மழு: தந்தை சிவபெருமானின் ஆயுதம். உயிர்களைப் பிணைத்துள்ள பாசங்களை வெட்டி நீக்கி, வீடுபேற்றைத் தருவது.

பாசம், அங்குசம்: உயிரின் ஆணவ மலத்தை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தைக் குறிப்பது அங்குசம்

சக்கரம்: விஷ்ணுவின் ஆயுதம். கூர்மை, காலம், செயல்நேர்த்தி இவற்றின் அடையாளம்.

ஒடிந்த தந்தம்: துாய்மையையும் மனஉறுதி யையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.

தானியக் கொத்து: பயிர் வளத்தைக் குறிப்பது. அடியார்களின் ஆரோக்கியத்தைக் காப்பவர் கணபதி என்பதைக் காட்டுவது.

அம்பு: கூர்மையானது. எந்நிலையிலும் உயிருக்கு அருள் செய்பவர் கணபதி என்பதைக் காட்டுவது.

பலன்:அனைத்து தடைகளும் நீங்கி அருள் பெருகும்; வளம் பெருகும்.

அருள் தொடரும்

வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்






      Dinamalar
      Follow us