sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பத்மநாபோ மரப்பிரபு

/

பத்மநாபோ மரப்பிரபு

பத்மநாபோ மரப்பிரபு

பத்மநாபோ மரப்பிரபு


ADDED : பிப் 09, 2024 11:13 AM

Google News

ADDED : பிப் 09, 2024 11:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமாலுக்கு 'பத்மநாபோ அமரப்பிரபு' என பெயருண்டு.

இதை 'பத்மநாபோ மரப்பிரபு' என தவறாக புரிந்து கொண்டார் பக்தர் ஒருவர்.

தன் வீட்டின் அருகிலுள்ள பெரிய மரம் ஒன்றை, 'பத்மநாபோ மரப்பிரபு' எனச் சொல்லியபடி சுற்றிக் கொண்டே திருமாலை வழிபட்டார்.

அதைக் கண்ட அந்தணர் ஒருவர், '' இப்படிச் சொல்வது தவறு. இந்த சொல் மரத்தைக் குறிக்கவில்லை. தேவர்களுக்கு எல்லாம் தலைவனான மகாவிஷ்ணு என்னும் பொருளில் 'பத்மநாபோ அமரப்பிரபு' என்று சொல்கிறோம்'' என்று விளக்கிச் சென்றார்.

அன்றிரவு அந்தணரின் கனவில், ''ஏன் என்னை மரம் எனக் கூறக் கூடாதா? நான் மரங்களில் குடியிருப்பதை உணர்த்தவே விஷ்ணு புராணத்தில் பராசர மகரிஷி 'புவனானி விஷ்ணு' என்றார்.

அது போல காட்டில் நான் இருப்பதைக் காட்ட 'வனானி விஷ்ணு' என்றார். எனவே அந்த பக்தர் மீது தவறு ஒன்றும் இல்லை” எனச் சொல்லி மறைந்தார்.

பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே.






      Dinamalar
      Follow us