sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சீதை சொன்ன கரடி கதை

/

சீதை சொன்ன கரடி கதை

சீதை சொன்ன கரடி கதை

சீதை சொன்ன கரடி கதை


ADDED : ஜன 07, 2022 08:40 AM

Google News

ADDED : ஜன 07, 2022 08:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக வனத்திற்கு வந்த அனுமன், “தாயே! தங்களை துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி அளியுங்கள்” என சீதையிடம் வேண்டினார்.

“அனுமனே... பணியாட்களான அவர்களைத் தண்டிப்பது பாவம்” எனத் தடுத்ததோடு கதை ஒன்றைச் சொன்னாள். அனுமனும் ஆவலாகக் கேட்டார்.

புலி ஒன்று மாலை நேரத்தில் வேடன் ஒருவனைத் துரத்தியது. உயிர் பிழைக்க ஓடிய வேடன் மரத்தின் மீதிருந்த கரடியிடம் தஞ்சமடைந்தான். இருள் சூழ்ந்ததும் புலி இடத்தை விட்டு நகராமல் மரத்தின் கீழ் நின்றது. களைப்பால் வேடன், கரடியின் மடி மீது தலை வைத்து துாங்க ஆரம்பித்தான்.

அப்போது புலி கரடியிடம், “நம்மை வேட்டையாடும் இவனுக்கு அடைக்கலம் தருவது நல்லதல்ல. அவனைக் கீழே தள்ளினால் நான் பசியாறுவேன்” என்றது.

அதை ஏற்காத கரடி,“தஞ்சம் அடைந்தவரைக் காப்பது கடமை” என மறுத்தது. சற்று நேரத்தில் வேடன் கண் விழிக்க, கரடி ஓய்வெடுக்க விரும்பியது. வேடனின் மடி மீது தலை வைத்த கரடி துாங்கத் தொடங்கியது. அப்போது புலி, “ஏ..வேடனே! என்னிடம் தப்பிக்க எண்ணி கரடியிடம் சிக்கி விட்டாய். கண் விழித்ததும் உன்னை கொன்று விடும். அதைக் கீழே தள்ளினால் பசியாறிக் கொள்வேன்” என்றது. சம்மதித்த வேடன் கரடியைத் தள்ளி விட முயன்றான். சுதாரித்த கரடி மரக்கிளையைப் பற்றிக் கொண்டது. அது கண்டு பதறிய வேடனிடம், 'பயப்படாதே! உன்னைக் கொல்ல மாட்டேன்' எனக் கரடி உறுதியளித்தது. அந்தக் கரடியைப் போல நமக்கும் உயர்ந்த மனம் வேண்டும் என்றாள் சீதை. அதைக் கேட்ட அனுமனும் அரக்கியரைத் தண்டிக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.






      Dinamalar
      Follow us